Home இலங்கை அரசியல் வரலாற்றில் முதன் முறை: தமிழ் கட்சி சார்பில் தேர்தலில் களமிறங்கும் பௌத்த பிக்குகள்

வரலாற்றில் முதன் முறை: தமிழ் கட்சி சார்பில் தேர்தலில் களமிறங்கும் பௌத்த பிக்குகள்

0

முன்னாள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா(Douglas Devananda) தலைமையிலான தமிழ் கட்சியான ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி (ஈபிடிபி) இரண்டு பௌத்த பிக்குகளை எதிர்வரும் பொதுத்தேர்தலில் களமிறக்கியுள்ளதுடன், பௌத்த பிக்கு ஒருவரை களமிறக்கிய முதல் தமிழ் கட்சி என்ற வரலாறையும் படைத்துள்ளது.

பௌத்த பிக்குகளான வணக்கத்துக்குரிய கிரிபனாரே விஜித தேரர்(Venerable Kiriebbanare Vijitha Thera) மற்றும் வணக்கத்துக்குரிய உடவளவே ஜினசிறி தேரர்(Venerable Udawalawe Jinasiri Thera) ஆகியோர் கொழும்பு மாவட்டத்தில் ஈ.பி.டி.பி.சார்பில் பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ளனர்.

தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்த போட்டி

“தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈபிடிபி கட்சியில் பொதுத் தேர்தலில் போட்டியிட நான் தீர்மானித்தேன்.

தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதே எங்களின் ஒரே முயற்சியே தவிர, நாங்கள் பதவிகளுக்குப் பின் செல்லவில்லை. நாங்கள் ஒரே இலங்கை தேசத்தை கட்டியெழுப்ப விரும்புகிறோம்” என வேட்புமனு கையளித்த பின்னர் ஊடகங்களுக்கு வணக்கத்துக்குரிய விஜித தேரர் தெரிவித்தார்.

கொழும்பு (colombo)மாவட்டத்தில் உள்ள ஈபிடிபி பட்டியல் தமிழர்கள், முஸ்லிம்கள் மற்றும் சிங்களவர்கள் என அனைத்து சமூகங்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறது.

நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 25

Source: https://ibctamil.com/article/tamil-party-buddhist-monks-to-contest-election-1728760270

NO COMMENTS

Exit mobile version