Home இலங்கை அரசியல் தந்தை செல்வாவின் புகழைக் கொன்ற தமிழரசுக்கட்சி பிரமுகர்கள் : ஆனந்தசங்கரி ஆதங்கம்

தந்தை செல்வாவின் புகழைக் கொன்ற தமிழரசுக்கட்சி பிரமுகர்கள் : ஆனந்தசங்கரி ஆதங்கம்

0

தந்தை செல்வாவின் புகழை தமிழரசுக்கட்சி பிரமுகர்கள் கொன்றுவிட்டதாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம்
வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், இந்த நாட்டு மக்கள் எதை மறந்து விட்டார்கள் என நான் நினைக்கிறேனோ அல்லது எதை தப்பாக விளங்கி கொண்டார்கள் என நான் நினைக்கின்றேனோ அதற்குரிய தெளிவை நான் வழங்குகிறேன்.

தந்தை செல்வா இறந்த நாள் எல்லோருக்கும் ஒரு முக்கியமான நாள். இவர் என்னுடன் பாசத்தோடும், அன்போடும் பழகியவர்.

நாடாளுமன்றத்தில் அவருடைய ஆசனத்திற்கு பின்னாடி நான் இருப்பேன்.

இவர் ஈழத்து காந்தி என போற்றப்பட்டவர் எனவும்  நடந்த குறை நிறைகளை மறந்து தமிழர் விடுதலைக் கூட்டணியில் இணையுங்கள் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்…

Source: https://tamilwin.com/article/tamil-party-leaders-who-killed-father-selva-s-fame-1714332497

NO COMMENTS

Exit mobile version