Home இலங்கை அரசியல் வவுனியாவில் இடம்பெற்ற தமிழ் மக்கள் கூட்டணியின் கலந்துரையாடல்

வவுனியாவில் இடம்பெற்ற தமிழ் மக்கள் கூட்டணியின் கலந்துரையாடல்

0

நடைபெற்று முடிவடைந்துள்ள உள்ளூராட்சி தேர்தலில் யாரை ஆதரிப்பது மற்றும்
அடுத்த கட்ட செயற்பாடுகள் தொடர்பில் தமிழ் மக்கள் கூட்டணியின் கலந்துரையாடல்
வவுனியாவில் நடைபெற்றுள்ளது. 

கட்சியின் மாவட்ட அமைப்பாளர் தமிழழகன் தலைமையில் வவுனியா, வைரவபுளியங்குளம்
பகுதியில் உள்ள விருந்தினர் விடுதியில் குறித்த கலந்துரையாடல் நேற்று(11.05.2025) மாலை
இடம்பெற்றுள்ளது.

இதில் கட்சிக்கு கிடைத்த போனஸ் ஆசனத்தில் பிரதேச சபைக்கு உறுப்பினர்களை
நியமிப்பது தொடர்பிலும் தவிசாளர் தெரிவில் யாரை ஆதரிப்பது தொடர்பிலும்
ஆராயப்பட்டதுடன், தேர்தலுக்கு பின் கட்சியை வவுனியா மாவட்டத்தில் விரிவாக்கம்
செய்வது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

கலந்து கொண்ட வேட்பாளர்கள்

இதல் கட்சியில் போட்டியிட்ட வேட்பாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

NO COMMENTS

Exit mobile version