Home இலங்கை அரசியல் தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் அநுர அரசாங்கத்தின் நிலைப்பாடு

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் அநுர அரசாங்கத்தின் நிலைப்பாடு

0

தமிழ் அரசியல் கைதிகள் அனைவரும் விடுவிக்கப்படுவார்கள் என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அடுத்தக் கட்ட நடவடிக்கை 

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே நாம் உள்ளோம்.

அந்தவகையில் சில சட்டச் சிக்கல்கள் உள்ளன. அந்த விடயம் தொடர்பில் நீதி அமைச்சின் ஊடாக அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். அதற்கமைய தமிழ் அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்படுவர் என குறிப்பிட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version