Home இலங்கை சமூகம் 17 வருடங்களாக தனது தந்தைக்காக காத்திருக்கும் ஆனந்த சுதாகரன் மகளின் உருக்கமான கோரிக்கை

17 வருடங்களாக தனது தந்தைக்காக காத்திருக்கும் ஆனந்த சுதாகரன் மகளின் உருக்கமான கோரிக்கை

0

சச்சிதானந்தம் ஆனந்த சுதாகர், 2008 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு 17 வருடங்களாக மெகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவருக்கு 9 வருடங்கள் கழித்து ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில், இவரின் 36 வயதான மனைவி யோகராணி
2018 இல் உயிரிழந்திருந்தார்.

ஆனந்த சுதாகர் மனைவியின் மரணச் சடங்கிற்கு அழைத்து வந்திருந்த போது, அவரின் மகள் சிறைச்சாலை பேருந்தில் ஏறிச்செல்ல முயற்சி செய்திருந்தமை
பார்த்தவர்களின் மனதை கலங்க வைத்தது.

இன்று இத்தனை ஆண்டுகள் கழித்தும் தாயுமில்லாது, தந்தையுமில்லாது போராடி வரும் சுதாகரன் மகள் சங்கீதா இந்த அரசாங்கமாவது எனது தந்தையை விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

லங்காசிறிக்கு வழங்கிய பிரத்தியே நேர்காணலின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

முழுமையான தகவல்களை கீழுள்ள காணொளியில் காண்க… 

NO COMMENTS

Exit mobile version