கிளிநொச்சியில் (Kilinochchi) அமைந்துள்ள தமிழரசுக் கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் பொது வேட்பாளருக்கு ஆதரவு வழங்குவதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழரசுக் கட்சியின் மாவட்ட அலுவலகத்தில்
இன்று (30.08.2024) பிற்பகல் குறித்த கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது.
இதன்போது, கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்கள்
பொது வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிப்பதாக தீர்மானம் எடுத்துள்ளனர்.
முல்லைத்தீவில் பிரசாரம்
இதேவேளை, முல்லைத்தீவில் (Mullaitivu) பிரசார நடவடிக்கைகளுக்காக தமிழ் பொது வேட்பாளர் பாக்கியசெல்வம் அரியநேந்திரன் இன்றையதினம் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.