Home முக்கியச் செய்திகள் தமிழ் பொதுவேட்பாளருக்கு வாக்களிப்பது தமிழ் தேசியத்தை முடக்குவதற்கு சமம்! கஜேந்திரகுமார் எச்சரிக்கை

தமிழ் பொதுவேட்பாளருக்கு வாக்களிப்பது தமிழ் தேசியத்தை முடக்குவதற்கு சமம்! கஜேந்திரகுமார் எச்சரிக்கை

0

தமிழ்பொதுவேட்பாளரை நிறுத்தி மக்களை ஆதரிக்க வைப்பது இலங்கையர் என்ற வட்டத்தில் தமிழ் தேசியத்ததை முடக்கி வைத்திருப்பதற்கு சமம் என்று தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (Gajendrakumar Ponnambalam) தெரிவித்துள்ளார்.

கொழும்பில் (Colombo) நேற்று(16) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும் தெரிவித்த அவர்,

13 ஆம் திருத்தத்தை வலியுறுத்தி வந்த தரப்புக்களை போலியான ஒற்றுமையை காட்டி சமஸ்டியை கோருகின்றோம் என கூறி பகிஸ்கரிப்பிலிருந்து மக்களை தவிர்த்து ரணிலுக்கு மாற்றாக செல்லக்கூடிய வாக்குகளை தங்களுக்கு விசுவாசமான தரப்புக்கு ஆதரவு கோருவதே இந்த தமிழ் பொது வேட்பாளர் தரப்பு.

தமிழ் தேசியவாதிகள் சஜித்துடன் (Sajith Premadasa )இருப்பதாக ஒரு குழப்பத்தை ஏற்படுத்தி அவருக்கான வாக்குகளை குறைப்பதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், தமிழ்தேசியத்துக்கு நேர்மையாக இருப்பதற்கான ஒரு வழி பகிஸ்கரிப்பது மட்டுமே” என்றார்.

மேலும், இது  தொடர்பான விரிவான விளக்கங்களை கீழுள்ள காணொளியில் காணலாம்…!

https://www.youtube.com/embed/GlLKvD4n6QE

NO COMMENTS

Exit mobile version