Home முக்கியச் செய்திகள் இடை நிறுத்தப்படும் வினாத்தாள் மதிப்பீட்டு பணி : போராட்டத்தில் குதிக்கும் ஆசிரியர் சங்கம்

இடை நிறுத்தப்படும் வினாத்தாள் மதிப்பீட்டு பணி : போராட்டத்தில் குதிக்கும் ஆசிரியர் சங்கம்

0

சாதாரண தர பரீட்சை வினாத்தாள் மதிப்பிட்டு பணிகள் நாளை (12) பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் நிறுத்தப்படும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின்  (Joseph Stalin) தெரிவித்துள்ளார்.

அதன்படி நாடளாவிய ரீதியில் உள்ள 101 சாதாரண தர மீள் மதிப்பீட்டு நிலையங்களுக்கு முன்பாகவும், 100 வலய அலுவலகங்களுக்கு முன்பாகவும் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் இணைந்து மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அவர் தெரிவித்திருந்தார்.

ஆசிரியர் – அதிபர் சம்பள கொடுப்பனவை நீக்கியமை மற்றும் பெற்றோர்களின் கல்விச் சுமையை உடனடியாக நிறுத்துதல் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து, குறித்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தொழிற்சங்க நடவடிக்கை

 இதேவேளை, இலங்கை ஆசிரியர் சங்கம் எதிர்வரும் 26ஆம் திகதி நாடளாவிய ரீதியில் பாடசாலைகளுக்கு விடுமுறையை அறிவித்து பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதற்கு தீர்மானித்துள்ளது.

ஆசிரியர்களுக்கான சம்பள முரண்பாடு காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின்  தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Source: https://ibctamil.com/article/teacher-principals-protest-tomorrow-1718114458?itm_source=parsely-popular

NO COMMENTS

Exit mobile version