Home இலங்கை சமூகம் தொடர் போராட்டம் நடத்துவோம்: ஆசிரியர் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை

தொடர் போராட்டம் நடத்துவோம்: ஆசிரியர் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை

0

கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என ஆசிரியர் – முதன்மைச் சங்கங்கள் விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளன. 

பாடசாலை நேரத்தின் பின்னர் பாடசாலைக்கு முன்பாக நேற்று முன்தினம் (02) நடத்தப்பட்ட போராட்டத்தின் பின்னரும் தமது கோரிக்கைகளுக்கு கவனம் செலுத்தப்படா விட்டால் பாடசாலை நேரத்திலும் தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கமைய, நாளைய தினம் (05) அனைத்து தொழிற்சங்கங்களையும் கொழும்புக்கு வரவழைத்து எதிர்கால நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடவுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

தொழிற்சங்க நடவடிக்கை

எவ்வாறாயினும், சம்பள முரண்பாடுகளை நீக்குமாறு அதிகாரிகளை வலியுறுத்தி கடந்த சில நாட்களாக ஆசிரியர் மற்றும் அதிபர் சங்கங்கள் பல்வேறு தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.

இதேவேளை, நேற்று நாடளாவிய ரீதியில் பாடசாலைகளுக்கு முன்பாக எதிர்ப்பு பிரசாரத்திலும் ஈடுபட்டனர்.

அது மாத்திரமன்றி, கடந்த 01ஆம் திகதி, பாடசாலைகளுக்கு முன்பாக கறுப்புக்கொடி மற்றும் பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

எதிர்ப்பு பிரசாரம் 

எவ்வாறாயினும், தொழில்சார் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், பெற்றோர்கள் இந்த நிலையை புரிந்து கொள்ள வேண்டும் எனவும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், நேற்றைய தினம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஆசிரியர்களின் இந்த ஆர்ப்பாட்டம் குறித்தும் அதற்கான சட்ட நடவடிக்கைகள் குறித்தும் கருத்து தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

NO COMMENTS

Exit mobile version