Home இலங்கை அரசியல் ஜனாதிபதியை சந்தித்தார் கனேடிய உயர்ஸ்தானிகர்

ஜனாதிபதியை சந்தித்தார் கனேடிய உயர்ஸ்தானிகர்

0

கனேடிய (Canada) உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஷ் (Eric Walsh), ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை (Anurakumara Dissanayake) சந்தித்துள்ளார்.

குறித்த சந்திப்பானது இன்று (02) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது. 

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பெற்ற வெற்றிக்கு தனதும், கனேடிய அரசாங்கத்தினதும் மற்றும் மக்களினதும் மனப்பூர்வமான வாழ்த்துக்களை கனேடிய உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்.

கனேடிய உயர்ஸ்தானிகர் 

ஊழலை ஒழித்து நாட்டில் பாதுகாப்பான சூழலை ஏற்படுத்துவதில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அர்ப்பணிப்பையும் அவர் பாராட்டியுள்ளார்.

ஊழல் மற்றும் பாதுகாப்பின்மையும் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதில் முக்கிய தடையாக இருப்பதாக சுட்டிக்காட்டிய கனேடிய உயர்ஸ்தானிகர், உத்தேச சீர்திருத்தங்களின் மூலம் சர்வதேச முதலீடுகளை ஈர்ப்பதற்கான மிகவும் பொருத்தமான சூழல் இலங்கையில் உருவாகும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்துடனான (IMF) இலங்கை தொடர்புபட்டிருப்பது மற்றும் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் கடன் மறுசீரமைப்பு செயல்முறைக்கும் கனேடிய அரசாங்கத்தின் முழு ஆதரவையும் வழங்குவதாகவும் உயர்ஸ்தானிகர் உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  

NO COMMENTS

Exit mobile version