Home இலங்கை சமூகம் பாடசாலை அதிபர்கள் எடுத்துள்ள தீர்மானம்

பாடசாலை அதிபர்கள் எடுத்துள்ள தீர்மானம்

0

அதிபர்களின் சம்பள பிரச்சினைக்கு தீர்வுகள் வழங்கப்படும் வரை அரசியல்வாதிகள் பங்கேற்கும் உத்தியோகபூர்வ நிகழ்வுகளில் பங்கேற்பதில்லை என ஏழு அதிபர்கள் சங்கங்கள் ஏகமனதாகத் தீர்மானித்துள்ளன.

பாடசாலைகளில் நடைபெறும் நிகழ்வுகளுக்கு அரசியல்வாதிகளை அழைப்பதில்லை எனவும் தீர்மானித்துள்ளனர்.

அதிபர்களின் சம்பள பிரச்சினை

அதிபர்களின் சம்பளப் பிரச்சினை தீர்க்கப்படும் வரை குறுகிய கால தீர்வாக, அதிபர் கொடுப்பனவு 15,000 ரூபாவினால் அதிகரிக்கப்பட வேண்டும் எனவும் சங்கம் தெரிவித்துள்ளது.

அண்மைக்காலமாக சம்பள பிரச்சினைக்கு தீர்வு காண கோரி ஆசிரியர் சங்கங்கள் சுகவீன விடுமுறை போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

NO COMMENTS

Exit mobile version