Home இலங்கை அரசியல் புதிய ஜனாதிபதி அநுரவிடம் மத குருமார்கள் விடுத்துள்ள கோரிக்கை

புதிய ஜனாதிபதி அநுரவிடம் மத குருமார்கள் விடுத்துள்ள கோரிக்கை

0

புதிய ஜனாதிபதியின் வருகையினால் இந்த நாட்டு மக்கள் சுபிட்சமான ஒரு வாழ்க்கையை
கொண்டு நடத்த வேண்டும் என மத குருமார்கள் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பில் புதிய ஜனாதிபதி அநுரகுமார
திசாநாயக்காவிற்கு ஆதரவாக இடம்பெற்ற மகிழ்ச்சி கொண்டாட்டங்களின் போதே அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.

இதன்போது அவர்கள் மேலும்
தெரிவிக்கையில்,

“புதிய ஜனாதிபதியின்
வருகையினால் இந்த நாட்டு மக்கள் சுபிட்சமான ஒரு வாழ்க்கையை கொண்டு நடத்த
வேண்டும். ஒற்றுமையை பற்றி பிடியுங்கள். ஒற்றுமையின் மூலம் அன்பாக, பண்பாக பாசத்தின் மூலம் பரஸ்பரமாக இருக்க வேண்டும்.

எல்லாவிதமான சிறப்புகள்

இலங்கை திருநாட்டில் நாம் ஒரு புதிய தலைவரை தேர்ந்தெடுத்து இருக்கின்றோம். புதிய
ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டு இருக்கின்ற அவர் இந்த நாட்டில் இருக்கின்ற
எல்லா மக்களுக்கும் சமத்துவமான சேவையினை வழங்க வேண்டும்.

புதிய ஜனாதிபதியின்
வருகை நாளே இந்த நாட்டில் இருக்கின்ற எல்லா மக்களும் எல்லாவிதமான
சிறப்புகளையும் பெற வேண்டும். 

இவர்கள் செய்கின்ற ஒவ்வொரு சேவையிலும் இறைவனின் திருவருளோடு சிறப்பாக நடைபெற
வேண்டும்” என தெரிவித்தனர்.
 

NO COMMENTS

Exit mobile version