ஹபராதுவ, அமுகொட்டுவ பகுதியில் பெண் ஒருவர் அவருடைய கணவனால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
அங்குலுகஹா பகுதியைச் சேர்ந்த 42 வயதான பெண் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
குடும்ப தகராறு
உயிரிழந்த பெண்ணிற்கும் அவருடைய கணவருக்கும் ஏற்பட்ட குடும்ப தகராறு அதிகரித்து கணவரால் குறித்த பெண் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொல்லப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், சடலம் கராப்பிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், சந்தேக நபரை கைது செய்வதற்காக ஹபராதுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
