Home இலங்கை அரசியல் இலங்கை தமிழரசுக்கட்சியின் அடுத்த தலைமை: கோரிக்கை விடுத்துள்ள அரியநேத்திரன்

இலங்கை தமிழரசுக்கட்சியின் அடுத்த தலைமை: கோரிக்கை விடுத்துள்ள அரியநேத்திரன்

0

இலங்கை தமிழரசுக்கட்சியை அடுத்த கட்டத்திற்கு நகர்த் தவேண்டுமானால் நிலையான தலைமைப்பொறுப்பினை ஏற்ககூடியவர்கள் முன்வரவேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக்கட்சியின் சார்பில் பொது தேர்தலில்
போட்டியிடும் ஞா.சிறிநேசனினுடைய பிரசார பணியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே இதனை கூறியுள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர், 

இலங்கை தமிழரசுக்கட்சி 

“இலங்கை தமிழரசுக்கட்சி நீண்டகாலத்திற்கு பின்னர் தனித்துவமாக இந்த தேர்தலில்
போட்டியிடும் நிலைமை இருக்கின்றது.

தேர்தலில் நிச்சயமாக இலங்கை தமிழர்
கட்சிகளை நாங்கள் மூன்று ஆசனங்களை பெறுவதற்கான வாய்ப்பு எங்களுக்கு
இருக்கின்றது.

அந்த மூன்று ஆசனங்களை பெறுவதுதான் நோக்கம் அல்ல. ஆசனங்களை
பெறுவதில் அந்த ஆசனத்தில் வரக்கூடியவர்கள் யார் என்பதை நாங்கள் சிந்திக்க
வேண்டும்.

இலங்கை தமிழரசுக்கட்சியின் இன்று பல்வேறுபட்ட இன்னல்கள், பிளவுகள் சட்டங்கள்
வழக்குகள் என்று போடப்பட்டிருக்கின்றது.

நேர்மையான உறுப்பினர்கள்

இந்த காரணங்களை நாங்கள் பார்க்கின்ற போது அதிலே
நேர்மையானவர்கள்,உண்மையானவர்கள்,உறுதியானவர்கள் பற்றாளர்கள் அந்த கட்சியிலே
இல்லாததன் காரணமாக இவ்வாறான ஒரு நிலை ஏற்பட்டிருக்கின்றது.

அதை காப்பாற்ற
வேண்டுமாக இருந்தால் இலங்கை தமிழர் கட்சி மாத்திரம் வெற்றி பெறக் கூடாது.

இலங்கை தமிழர் கட்சியிலிருந்து செல்கின்ற உறுப்பினர்கள் உறுதியானவர்களாக
உண்மையானவர்களாக நேர்மையானவர்களை நாங்கள் இனங்காணவேண்டும்” என்றார்.

NO COMMENTS

Exit mobile version