Home இலங்கை பொருளாதாரம் மின்சாரக்கட்டணம் குறைக்கப்பட்டதை அடுத்து உணவுப் பொருட்களின் விலையும் குறைப்பு

மின்சாரக்கட்டணம் குறைக்கப்பட்டதை அடுத்து உணவுப் பொருட்களின் விலையும் குறைப்பு

0

Courtesy: Sivaa Mayuri

மின்சாரக்கட்டணம் குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து, குறிப்பிட்ட சில உணவுப் பொருட்களின் விலையும் குறைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, சோறு மற்றும் கறி (Rice and curry), ப்ரைட் ரைஸ் (Fried rice) மற்றும் கொத்து (Koththu) என்பவற்றின் விலை 25 ரூபாயால் குறைக்கப்படும் என்று அகில இலங்கை சிற்றுண்டி உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.

அத்துடன் பரோட்டா, முட்டை ரொட்டி மற்றும் சிற்றுண்டிகளின் விலை 10 ரூபாயால் குறைக்கப்படும் என்றும் சங்கம் அறிவித்துள்ளது.

ஆணைக்குழு அறிவித்தல்

முன்னதாக மின்சாரக்கட்டணத்தை நாளை முதல் நடைமுறைக்கு வரும் வகையில் 22.5 வீதத்தினால் குறைப்பதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்தல் ஒன்றை விடுத்திருந்தது.

பொதுமக்கள் மத்தியில் இடம்பெற்ற கருத்தாடல்களை அடுத்தே இந்த குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆணைக்குழு குறிப்பிட்டிருந்தது. 

NO COMMENTS

Exit mobile version