Home இலங்கை அரசியல் தேர்தல் விதிமுறைகள் மீறிய பிரதமர்! ஸ்ரீகாந்தா குற்றச்சாட்டு

தேர்தல் விதிமுறைகள் மீறிய பிரதமர்! ஸ்ரீகாந்தா குற்றச்சாட்டு

0

யாழில், பிரதமர் கலந்துகொண்ட தேர்தல் பிரச்சார கூட்டங்களில் தேர்தல் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசிய கட்சியின் தலைவர் சட்டத்தரணி ஸ்ரீகாந்தா குற்றம் சுமத்தியுள்ளார்.

இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய மகா கும்பாபிஷேகம் நேற்றைய தினம் நடைபெற்ற போது, ஆலயத்தினுள் அதிரடியாக பாதுகாப்பு அதிகாரிகளுடன் புகுந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் வழிபாட்டுக்கு இடையூறு விளைவித்துள்ளார் என்றும் ஸ்ரீகாந்தா தெரிவித்துள்ளார்.

பிரதமரின் பாதுகாப்புக்காக வந்தவர்கள், காலணிகளோடு ஆலய வளாகத்தில் புகுந்துள்ளார்கள் என்றும், அது இந்து மக்களுக்கு மிகப் பெரிய மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.

இதற்காக பிரதமர் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த ஸ்ரீகாந்தா, 

NO COMMENTS

Exit mobile version