Home முக்கியச் செய்திகள் உலகின் இளம் பேராசிரியராக 12 வயது இந்திய சிறுவன் சாதனை

உலகின் இளம் பேராசிரியராக 12 வயது இந்திய சிறுவன் சாதனை

0

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுபோனோ பாரி என்ற 12 வயது மாணவர், உலகின் இளம் பேராசிரியராக மாறியுள்ளார்.

அவரது அறிவார்ந்த நிலை காரணமாக, மும்பை பல்கலைக்கழகத்தில் இயற்பியல் விருந்தினர் பேராசிரியராக விரிவுரைகளை வழங்க அவர் ஏற்கனவே அழைக்கப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்காவின் உயர்கல்வி நிறுவனங்களுக்கு மாணவர்களை சேர்க்கும் போட்டித் தேர்வான SAT தேர்வில் 11 வயதில் 1500 மதிப்பெண்கள் பெற்று உலக சாதனை படைத்தார் சுபோனோ பாரி.

உலக சாதனை

சுபோனோ பாரி அமெரிக்காவில் உள்ள மேல்நிலைப் பள்ளியில் டிப்ளோமா பெறும் இளைய மாணவர் ஆவார்.

நாளை மறுதினம் (26) நடைபெறும் விழாவில் அவர் டிப்ளோமா பட்டம் பெற உள்ளார்.

பேராசிரியராக வருவார் 

அவரது திறமையின் காரணமாக,கணிதம் மற்றும் இயற்பியலில் நியுயோர்க் பல்கலைக்கழகத்தில் முழுமையான புலமைப்பரிசிலை பெற்றுள்ளார்.

பாரி இரண்டு புத்தகங்களை எழுதியுள்ளார், மேலும் அவர் இளைய பேராசிரியராகவும், மும்பை பல்கலைக்கழகத்தின் விருந்தினர் விரிவுரையாளராகவும் உள்ளார். பாரி ஒரு பேராசிரியராக வருவார் என வெளிநாட்டு ஊடகமொன்று தெரிவித்தது. 

NO COMMENTS

Exit mobile version