Home இலங்கை சமூகம் யாழில் காவல்துறை உத்தியோகத்தர் வீட்டில் திருட்டு : ஒருவர் கைது

யாழில் காவல்துறை உத்தியோகத்தர் வீட்டில் திருட்டு : ஒருவர் கைது

0

யாழில் (Jaffna) காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் வீட்டில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் நவாலி பகுதியில் உள்ள காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் வீட்டிலேயே இந்த திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.  

கைது செய்யப்பட்ட குறித்த நபர்  நேற்றையதினம் (15) விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

காவல்துறையினர் விசாரணை

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், கடந்த வாரம் காவல்துறை உத்தியோகத்தரின் வீட்டின் குளியலறை ஊடாக உள்நுழைந்து ஆறரை பவுண் நகை மற்றும் 29 ஆயிரம் ரூபா பணம் என்பவை திருடப்பட்டுள்ளன.  

இதையடுத்து, திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட நபரை கைது செய்த காவல்துறையினர், அவரிடம் இருந்து மூன்றரைப் பவுண் நகையை
யாழ்ப்பாண பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறையினர் மீட்டுள்ளனர்.

இதையடுத்து, குறித்த சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட காவல்துறையினர் சந்தேக நபரை நீதிமன்றத்தில் முற்படுத்தியுள்ளனர்.

மேலும், பிரதான சந்தேக நபரை கைது செய்யும் நடவடிக்கையில் காவல்துறையினர் விசாரணைகளை
மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version