தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவரும் தமிழக சட்டமன்ற உறுப்பினருமான
திருநாவுக்கரசு வேல்முருகனுக்கும் தமிழ்த் தேசிய பேரவைக்கும்
இடையிலான சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
முக்கிய விடயங்கள்
இன்று (19.12.2025) அவரது அலுவலகத்தில் பி.ப 2.25 மணியளவில் ஆரம்பமாகிய குறித்த சந்திப்பானது சுமார் 3.00 மணிநேரம் நேரம் வரை நடத்தப்பட்டுள்ளது.
இதன்போது
தமிழர் தேசம் இறைமை சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்ட சமஷ்டி யாப்பு
உருவாக்கப்பட குரல் கொடுக்க ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டியதன் அவசியம் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.
ஏக்கிய இராச்சிய அரசியல் யாப்பினை நிராகரிப்பதற்கான அவசியம்
ஈழத்தமிழ் கடற்தொழிலாளர் பிரச்சினை தீர்க்கப்படல் வேண்டும். ஆகிய விடயங்கள்
முக்கியமாக பேசப்பட்டுள்ளது.
