Home இலங்கை சமூகம் யாழில் யுவதியைக் கடத்திய மூவர் கைது

யாழில் யுவதியைக் கடத்திய மூவர் கைது

0

யாழ் ஊர்காவற்துறைப் பகுதியில் யுவதியொருவரைக் கடத்திய குற்றச்சாட்டில் மூன்று இளைஞர்களை கைது செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில், ஊர்காவற்துறை பகுதியில் உள்ள தேவாலயம் ஒன்றிற்கு அருகில் வைத்து குறித்த யுவதியை வாகனமொன்றில் இளைஞர்கள் கடத்திச் சென்றுள்ளனர்.

இதையடுத்து, ஊர்காவற்துறையின் பிறிதொரு பகுதியில் யுவதியை இறக்கி விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீவிர விசாரணை

அத்தோடு, இச்சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகளை முன்னெடுத்த காவல்துறையினர் குறித்த இளைஞர்கள் மூவரையும் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருவதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Source: https://ibctamil.com/article/three-arrested-for-abducting-a-young-woman-in-yali-1720763791

NO COMMENTS

Exit mobile version