பொகவந்தலாவை பகுதியில் அனுமதியின்றி மாணிக்கக் கல் அகழ்வில் ஈடுப்பட்ட மூவர்
கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொகவந்தலாவை கெசல்கமுவ ஓயாவில் நேற்று(25) சட்டவிரோத மாணிக்கக் கல் அகழ்வு
இடம்பெறுவதாக வலான ஊழல் தடுப்பு பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய
தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது
செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, இவர்களிடமிருந்து மாணிக்கக் கல் அகழ்வுக்காக பயன்படுத்திய உபகரணங்களும்
கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலதிக விசாரணை
இதன்போது, கைது செய்யப்பட்ட மூன்று சந்தேகநபர்களையும் மாணிக்கக் கல் அகழ்வுக்காக
பயன்படுத்திய உபகரணங்களையும் நோர்வூட் பொலிஸ் நிலையத்தில்
ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர்களை நீதிமன்றத்தில்
முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
