போதைப்பொருள் விற்பனை செய்யும் வீடு என அடையாளம் காணப்பட்ட வீடொன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் தங்கியிருந்த மூன்று காவல்துறை உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மத்துகம காவல்துறையில் கடமையாற்றும் மூன்று காவல்துறை உத்தியோகத்தர்களே இன்று (29) இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகத்திற்குரிய மூன்று உத்தியோகத்தர்களும் போதைப்பொருள் விற்பனை செய்யும் வீடொன்றில் தங்கியிருப்பதாக வெலிப்பன்ன காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் படி, , இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் குழுவினால் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணை
அதன் போது, சந்தேகநபர்கள் போதைப்பொருள் பயன்படுத்துவதற்கு அங்கு தங்கினார்களா என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், சந்தேகநபர்கள் மருத்துவ அறிக்கையின் பின்னர் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிபென்ன காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.