Home ஏனையவை ஆன்மீகம் மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் சிறப்பாக இடம்பெற்ற தீர்த்த உற்சவம்

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் சிறப்பாக இடம்பெற்ற தீர்த்த உற்சவம்

0

வரலாற்றுச் சிறப்பு மிக்க மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த மகோற்சவப் பெருந்திருவிழா கடந்த 13 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ச்சியாக திருவிழா இடம் பெற்று வருகின்றது.

இந்நிலையில்  தீர்த்த உற்சவமானது இன்று (22.05.2024) காலை
சிறப்பாக இடம்பெற்றுள்ளது.

மட்டு போதனா வைத்தியசாலையில் மருத்துவத்துறை வரலாற்றில் அரிதான சம்பவம்

விசேட பூஜை வழிபாடுகள்

இதன்போது உற்சவ மூர்த்திகளுக்கு வசந்த மண்டபத்தில் விசேட பூஜை வழிபாடுகள்
இடம் பெற்றதை தொடர்ந்து உற்சவ மூர்த்திகள் உள் வீதி ,வெளி வீதி உலா வந்தனர்.

அதனைத் தொடர்ந்து உற்சவ மூர்த்திகள் பாலாவி தீர்த்தக்கரைக்கு சென்றதை
தொடர்ந்து தீர்த்த உற்சவம் இடம் பெற்றுள்ளது.

ஆயிரக்கணக்கான பக்த அடியார்கள் தீர்த்த உற்சவத்தில் கலந்து
கொண்டிருந்ததோடு, இன்றைய தினம் (22) இரவு கொடி இறக்கம் இடம்பெறவுள்ளமை
குறிப்பிடத்தக்கது. 

ஒரு தொகுதி அரசாங்க ஊழியர்களுக்கு மீண்டும் அதிகரிக்கும் சம்பளம்

இந்தியாவில் கைது செய்யப்பட்ட இலங்கையர்கள்: CID விசாரணையில் வெளியான தகவல்

   நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 

NO COMMENTS

Exit mobile version