Home இலங்கை அரசியல் தமிழ்த் தேசிய அரசியலில் நிராகரிக்க முடியாத தரப்பு எமது கட்சியே : கஜேந்திரகுமார் சுட்டிக்காட்டு

தமிழ்த் தேசிய அரசியலில் நிராகரிக்க முடியாத தரப்பு எமது கட்சியே : கஜேந்திரகுமார் சுட்டிக்காட்டு

0

தமிழ்த் தேசிய அரசியலில் இன்று நிராகரிக்க முடியாத ஒரே ஒரு தரப்பாக தமிழ்
தேசிய மக்கள் முன்னணியே (TNPF) உள்ளது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (Gajendrakumar Ponnambalam) தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு (Mullaitivu) – மாங்குளம் பகுதியில் நேற்று (02) இடம்பெற்ற தமிழ் தேசிய மக்கள்
முன்னணியின் வன்னி தேர்தல் தொகுதி செயற்பாட்டாளர்கள் உடனான கலந்துரையாடலிலேயே
இவ்வாறு குறிப்பிட்டார்.

இந்த கலந்துரையாடலில் சமகால அரசியல் நிலைமைகள், எதிர்வரும் தேர்தலை தமிழ் தேசிய மக்கள் முன்னணி எவ்வாறு எதிர்கொள்வது என்பது தொடர்பிலும், வன்னி தேர்தல் தொகுதியில் தேர்தலுக்காக பணியாற்றுவது குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

கலந்துரையாடலில் கலந்துகொண்டோர் 

தமிழ் தேசிய மக்கள்
முன்னணியின் வன்னி தேர்தல் மாவட்ட பிரதான வேட்பாளர் தவபாலன் தலைமையில் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் முன்னாள் நாடாளுமன்ற
உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்
செல்வராசா கஜேந்திரன், வன்னி தேர்தல் தொகுதி வேட்ப்பாளர்கள் மற்றும் வன்னி
தேர்தல் தொகுதியின் செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

NO COMMENTS

Exit mobile version