Home இலங்கை அரசியல் தேர்தல் செலவு அறிக்கைகளை பகிரங்கப்படுத்த ஆணைக்குழு நடவடிக்கை

தேர்தல் செலவு அறிக்கைகளை பகிரங்கப்படுத்த ஆணைக்குழு நடவடிக்கை

0

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் தேர்தல் ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்த தேர்தல் செலவு அறிக்கைகளை பொதுமக்களிடத்தில் பகிரங்கப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறித்த நடவடிக்கை இன்று (24.10.2024) முதல் முன்னெடுக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

வேட்பாளர்களின் தேர்தல் செலவு

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களின் தேர்தல் செலவு அறிக்கைகளை தேர்தல் ஆணைக்குழுவின் இணையத்தள பக்கத்தில் பெற்றுக்கொள்ள முடியும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும், வேட்பாளர்களின் தேர்தல் செலவு அறிக்கை குறித்து பொதுமக்கள் தமது கருத்துகள் மற்றும் முறைப்பாடுகளை முன்வைக்க முடியும் என தேர்தல் ஆணைக்குழு கூறியுள்ளது.  

NO COMMENTS

Exit mobile version