Home இலங்கை பொருளாதாரம் உச்சத்தை தொட்ட தங்க விலை : நகை வாங்க காத்திருப்போருக்கு அதிர்ச்சி தகவல்

உச்சத்தை தொட்ட தங்க விலை : நகை வாங்க காத்திருப்போருக்கு அதிர்ச்சி தகவல்

0

நாட்டில் கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கங்களுடன் பதிவாகி வருகின்றது.

அந்தவகையில், நாளுக்கு நாள் மாற்றத்துக்குள்ளான தங்க விலை நேற்று (12) சற்று குறைவடைந்த நிலையில் இன்று (13.09.2024) உச்ச அளவில் அதிகரித்துள்ளது.

முன்னைய தினங்களுடன் ஒப்பிடும் போதே தங்கத்தின் விலையில் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது.

தங்கத்தின் விலை

இன்றைய நிலவரத்தின் படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 775,389 ரூபாவாக காணப்படுகின்றது.

24 கரட் தங்க கிராம்(24 karat gold 1 grams) 27,360 ரூபாவாக பதிவாகியுள்ள அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 218,850 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல 22 கரட் தங்க கிராம் (22 karat gold 1 grams) 25,080 ரூபாவாக பதிவாகியுள்ளது. 22 கரட் தங்கப் பவுண்( 22 karat gold 8 grams) 200,650 ரூபாவாக பதிவாகியுள்ளது.

21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை (21 karat gold 1 grams) 23,940 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண்(21 karat gold 8 grams) 191,550 ரூபாவாக பதிவாகியுள்ளது.

செட்டியார் தெரு விபரங்கள்

அத்துடன், கொழும்பு செட்டியார் தெரு தங்க நிலவரங்களின் படி 24 கரட் தங்கப் பவுண் (24 karat gold 8 grams) ஒன்று 206,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேவேளை, அங்கு (22 karat gold 8 grams) ஒன்று 190,500 ரூபாவாக பதிவாகியுள்ளது. எனினும் தங்க ஆபரணங்களின் விலை இந்த விலைகளிலிருந்து மாற்றமடையலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version