Home முக்கியச் செய்திகள் 3,000 ரூபாயால் அதிகரித்த தங்க விலை : வாங்கவுள்ளோருக்கு முக்கிய தகவல்

3,000 ரூபாயால் அதிகரித்த தங்க விலை : வாங்கவுள்ளோருக்கு முக்கிய தகவல்

0

இலங்கையில் (Sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.

அந்தவகையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் குறைவடைந்த தங்க விலை படிப்படியாக உயர்வடைந்த நிலையில் இன்று மீண்டும் அதிகரித்துள்ளது.

இலங்கையில் இன்றையதினம், 24 கரட் தங்கம் பவுண் ஒன்றின் விலை, 3,000 ரூபாயால் அதிகரித்துள்ளதாக இலங்கை நகைக்கடை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

24 கரட் தங்கம்

கடந்த வாரத்தில் 24 கரட் தங்கம் 339,000 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று 342,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகின்றது.

அத்துடன், இன்றைய தினம் 22 கரட் தங்கம் பவுண் ஒன்று, 314,200 ஆயிரம் ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

இதேவேளை, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 42,750 ரூபாயாகவும்,

22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 39,275 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுவதாக இலங்கை நகைக்கடை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version