Home முக்கியச் செய்திகள் தொடரும் சீரற்ற வானிலை: கொட்டித் தீர்க்கப்போகும் இடியுடன் கூடிய மழை

தொடரும் சீரற்ற வானிலை: கொட்டித் தீர்க்கப்போகும் இடியுடன் கூடிய மழை

0

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களிலும். 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

அத்தோடு, ஊவா மற்றும் வட மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் மாலை அல்லது இரவில் ஒரு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், மேற்கு கடலோரப் பகுதிகளிலும் காலை வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என திணைக்களம் அறிவித்துள்ளது.

மக்களுக்கு வழங்கப்படவுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளின் உரிமை: ரணிலின் மகிழ்ச்சியான அறிவிப்பு

பலத்த காற்று

அத்துடன், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை மாவட்டத்திலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை நிலவும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புக்களை குறைத்துக் கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

எரிபொருளினால் பாரிய இலாபமீட்டும் சிறிலங்கா அரசு

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

NO COMMENTS

Exit mobile version