Home முக்கியச் செய்திகள் பலத்த காற்றுடன் கூடிய மழை: மக்களுக்கு வெளியான எச்சரிக்கை

பலத்த காற்றுடன் கூடிய மழை: மக்களுக்கு வெளியான எச்சரிக்கை

0

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி (Kandy), நுவரெலியா (Nuwara Eliya), காலி (Galle) மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பலதடவைகள் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

இதனை வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (23) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

அந்தவகையில், கிழக்கு மற்றும் ஊவாமாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படும்

ஓரளவு பலத்தகாற்று

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போதுமணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்தகாற்று வீசக் கூடிய சாத்தியம் காணப்படும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.

மேலும், மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version