Home உலகம் பூமியை மாசுபடுத்தும் நாடுகளில் முதலிடம் பெற்றுள்ள நாடு எது தெரியுமா…!

பூமியை மாசுபடுத்தும் நாடுகளில் முதலிடம் பெற்றுள்ள நாடு எது தெரியுமா…!

0

பூமியை மாசுபடுத்தும் நாடுகளின் பட்டியலில் இந்தியா (india) முதல் இடத்தை பிடித்துள்ளதாக ஆய்வு ஒன்றின் தரவுகளில் தெரியவந்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் 93 இலட்சம் டன் பிளாஸ்டிக் கழிவுகள் இந்தியாவில் கொட்டப்படுகிறது என்று நேச்சர் ஜர்னலில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

அத்துடன் உலக அளவில் 5 இல் ஒரு பங்கு பிளாஸ்டிக் கழிவுகள் இந்தியாவில் தான் உருவாகிறது என்று தரவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிளாஸ்டிக் கழிவுகள் உற்பத்தி

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு நபரும் ஒவ்வொரு நாளும் 120 கிராம் பிளாஸ்டிக் கழிவுகள் உற்பத்தி செய்கிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிற்கு அடுத்தபடியாக நைஜீரியா மற்றும் இந்தோனேசியா நாடுகளில் அதிக அளவில் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அந்த நாடுகளில் முறையே 35 லட்சம் மற்றும் 34 லட்சம் டன் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்படுகிறது.

கழிவு மேலாண்மை

உலகில் அதிக அளவிலான பிளாஸ்டிக் கழிவுகளை உருவாக்கும் நாடுகளில் பட்டியலில் சீனா (china) 4-ம் இடம் பிடித்துள்ளது.

இதற்கு முன்பு சீனா தான் அதிக அளவிலான பிளாஸ்டிக் கழிவுகளை உருவாக்கும் நாடாக இருந்தது.

ஆனால் இப்போது அந்நாட்டில் சிறப்பாக மேற்கொள்ளப்படும் கழிவு மேலாண்மையால் பிளாஸ்டிக் கழிவுகளை சீனா குறைத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version