சீனாவின் தேசிய மக்கள் காங்கிரஸ் நிலைக் குழுத் தலைவர் ஜாவோ லெஜி நாளை(23/12/2025) கொழும்புக்குப் வருகைத் தரவுள்ளார்.
இந்தநிலையில், சாவோ லெஜி மற்றும் அவரது குழுவினர் நாளைய தினம், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவைச்
சந்திக்கவுள்ளனர் என்றும் கூறப்படுகிறது.
இலங்கை வருகை
சீன அதிபர் ஷி ஜின்பிங், பிரதமர் லி கியாங்குக்குப் பின்னர், சீன
அரசாங்கத்தில் மூன்றாவது மிக உயர்ந்த பதவியில் உள்ள, ஜாவோ லெஜியின் இந்தப்
பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது.
மேலும், சாவோ லெஜி இரண்டு நாட்கள் இலங்கையில் தங்கியிருந்து, பேரிடருக்குப் பின்னரான உடனடித் தேவைகள் மற்றும் எதிர்கால சீன உதவி, இருதரப்பு
உறவுகளை வலுப்படுத்துவது குறித்து, இலங்கை அரசாங்க தரப்புகளுடன் அவர்
கலந்துரையாடுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இன்று(22/12/2025) இலங்கை வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
