Home இலங்கை சமூகம் விடுதியில் மர்மமான முறையில் உயிரிழந்த சுற்றுலா பயணி!

விடுதியில் மர்மமான முறையில் உயிரிழந்த சுற்றுலா பயணி!

0

ஹட்டன் கொட்டகலை பகுதியில் உள்ள விடுதியொன்றில் தங்கியிருந்த உள்நாட்டு சுற்றுலா பயணியொருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

கொழும்பிலிருந்து கொட்டகலைக்கு வருகை தந்த 60 வயதுடைய ரியென்சி பிள்ளை என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் தனது நண்பருடன் நேற்று(05.09.2025) சுற்றுலா விடுதிக்கு வந்து மது அருந்தி விட்டு விடுதியின் தரையில் விழுந்துள்ளார்.

மேலதிக விசாரணை

இதனையடுத்து, அவர் மீண்டும் தனது அறைக்கு சென்றுள்ளார். இவை அனைத்தும் விடுதியின் பாதுகாப்பு கமராவில் பதிவாகியுள்ளது.

இதனையடுத்து, இன்று அதிகாலை அவர் விடுதி அறைக்குள் இறந்து கிடந்ததை ஊழியர் ஒருவர் கண்டுபிடித்து பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.

இந்நிலையில், சம்பவம் தொடர்பான விசாரணைகளை திம்புல பத்தனை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version