யாழில் திடீர் சுகவீனம் ஏற்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் நேற்றையதினம் (03)
உயிரிழந்துள்ளார்.
உடுவில் – மல்வம் பகுதியை சேர்ந்த அந்தோனிப்பிள்ளை சின்ராசா
(வயது 53) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மரண விசாரணை
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
இவருக்கு கடந்த 02ஆம் திகதி மலத்துடன் இரத்தம் வெளியேறியது.
பின்னர் 03ஆம்
திகதி அவரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே
உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம்
பிறேம்குமார் மேற்கொண்டார்.
