Home முக்கியச் செய்திகள் யாழில் சற்றுமுன் கோர விபத்து – சம்பவ இடத்திலேயே பலியான இரு இளைஞர்கள்

யாழில் சற்றுமுன் கோர விபத்து – சம்பவ இடத்திலேயே பலியான இரு இளைஞர்கள்

0

சுன்னாகம் (Jaffna) நோக்கி பயணித்த இரண்டு இளைஞர்கள் கோர விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். 

குறித்த விபத்து இன்று (02.07.2025) மாலை 6.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. 

மின்சார கம்பத்துடன் மோதி பலி

புன்னாலைக் கட்டுவனிலிருந்து சுன்னாகம் நோக்கி பயணித்த இளைஞர்கள் இருவரும் வீதியின் குறுக்கே வந்த மாட்டைக்
கடப்பதற்காகத் முயற்சித்த போது எதிரே இருந்த மின்சார கம்பத்துடன் மோதியதில்
இருவரும் தூக்கி வீசப்பட்டு ஸ்தலத்திலே உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த இருவரும் கந்தரோடை சுண்ணாம் பகுதியைச் சேர்ந்த 17, 18 வயதுடைய
இளைஞர்கள் என காவல்துறையினர்  தெரிவித்தனர்.

குறித்த விபத்துச் சம்பவம் தொடர்பாக சுன்னாகம் காவல்துறையினர்
விசாரணை முன்னெடுத்து
வருகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version