ஜா-எல பகுதியில் தொடருந்து கடவையில் நேற்று இரவு (19.12.2025) ஏற்படவிருந்த பாரிய தொடருந்து விபத்து ஒன்று தவிர்க்கப்பட்டுள்ளது.
ஜா-எலவிலிருந்து மினுவாங்கொடை நோக்கிச் சென்றுக் கொண்டிருந்த வேனின் சக்கரங்கள், தொடருந்து தண்டவாளங்களுக்கு இடையில் சிக்கியதால், தொடருந்து கடவையில் நின்றது.
தொடருந்து கடவை
குறித்த சந்தர்ப்பத்தில், நீர்கொழும்பிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தொடருந்து கடவையை நெருங்கிக் கொண்டிருந்தது.
தொடருந்து கடவை மூடப்பட்டு, தொடருந்து அதிவேகமாக நெருங்கி வந்ததால், சம்பவ இடத்திலிருந்த ஒருவர் தொடருந்து பாதையில் முன்னோக்கி ஓடி, எதிரே வந்த தொடருந்தை நிறுத்துமாறு சைகை காட்டியுள்ளார்.
இதன் விளைவாக, குறித்த வேனில் இருந்து சுமார் ஐந்து அடி தூரத்தில் தொடருந்து நிறுத்தப்பட்டதால், பாரிய ஒரு விபத்து தவிர்க்கப்பட்டது.
இதில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்பதோடு தொடருந்து அதிகாரிகள் வாகனத்தை அகற்றி வழக்கமான தொடருந்து சேவைகளை மீட்டெடுத்து வழமைக்கு கொண்டு வந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
