வவுனியா தலைமை காவல்நிலைய பொறுப்பதிகாரிக்கு குருநாகல் மாவட்டத்திற்கு
இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதுடன், வவுனியா தலைமை காவல் நிலைய
பொறுப்பதிகரியாக வேறு ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
உடன் நடைமுறைக்கு வரும் வகையில் இடமாற்றம்
உடன் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
அந்தவகையில், வவுனியா தலைமைகாவல் நிலைய பொறுப்பதிகாரியாக கடமையாற்றி வரும்
ஜெயக்கொடி அவர்களுக்கு குருநாகல் மாவட்டத்திற்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
அவரது இடத்திறகு வவுனியா தலைமை காவல் நிலையப் பொறுப்பதிகாரியாக மாத்தளையில்
கடமையாற்றிய பீ.எஸ்.டிறட்ரண நியமிக்கப்பட்டுள்ளார். அவர் விரைவில் கடமைகளைப்
பொறுப்பேற்கவுள்ளார்.
