Home இலங்கை அரசியல் திருகோணமலை மாநகர சபைக்கு பதில் மாநகர ஆணையாளர் நியமனம்

திருகோணமலை மாநகர சபைக்கு பதில் மாநகர ஆணையாளர் நியமனம்

0

திருகோணமலை மாநகர சபையின் பதில் ஆணையாளராக யு.சிவராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகர இன்று (09) குறித்த நியமனக்
கடிதத்தை சிவராஜாவுக்கு திருகோணமலையில் உள்ள ஆளுனர் செயலகத்தில் வைத்து
வழங்கி வைத்தார்.

திருகோணமலை மாநகர சபை முன்னர் ஒரு நகராட்சி மன்றமாக இருந்தது, 2025
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்குப் பிறகு மாநகர சபையாக தரம் உயர்த்தப்பட்டது.

பதில் ஆணையாளர்

இலங்கை நிர்வாக சேவையை சேர்ந்த சிவராஜா தற்போது கிழக்கு மாகாண சமூக சேவைகள்
திணைக்களத்தின் மாகாண பணிப்பாளராக பணியாற்றி வருகின்றார்.

இதற்கு முன்னர் மாகாண விளையாட்டு துறை திணைக்கள
பணிப்பாளர்,ஆளுநர் செயலக உதவி செயலாளர் என பல்வேறு பதவிகளை வகித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version