Home இலங்கை சமூகம் தலதா மாளிகைக்குள் புகைப்படம் எடுத்த புதுமண தம்பதிக்கு வந்தது சிக்கல்

தலதா மாளிகைக்குள் புகைப்படம் எடுத்த புதுமண தம்பதிக்கு வந்தது சிக்கல்

0

வரலாற்றுச் சிறப்புமிக்க கண்டி(kandy) ஸ்ரீ தலதா மாளிகைக்குள் புதுமணத் தம்பதிகள் புத்த பகவானை அவமதிக்கும் வகையில் புகைப்படம் எடுத்த சம்பவம் தொடர்பில் காவல்துறை விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ஸ்ரீ தலதா மாளிகையின் தியவதன நிலமேக்கு கூட தெரிவிக்காமல் ஸ்ரீ தலதா மாளிகைக்கு வந்த தம்பதியினர், மேல் தளத்தில் உள்ள பிரதான மலர் இருக்கை உட்பட ஸ்ரீ தலதா மாளிகையின் பல்வேறு இடங்களில் புகைப்படம் எடுத்துள்ளனர்.

காவல்துறை விசாரணையில் வெளியான தகவல்

எனினும் ​​பணியில் இருந்த காவல்துறை அதிகாரிகள் அதை தடுக்க முயன்றனர். ஆனால் மற்றொரு செல்வாக்கு மிக்க தரப்பினர், காவல்துறை அதிகாரிகளை நிர்ப்பந்தம் செய்து, அவர்களை புகைப்படம் எடுக்க வைத்தது காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

கண்டிக்கு அழைப்பு

இந்த விடயம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக புகைப்படக் கலைஞருடன் தம்பதியினர் இன்று (09) கண்டிக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version