Home இலங்கை பொருளாதாரம் இன்று ஜனாதிபதி வெளியிடவுள்ள விசேட அறிக்கை

இன்று ஜனாதிபதி வெளியிடவுள்ள விசேட அறிக்கை

0

இலங்கை மீது அமெரிக்கா விதித்த 20வீத தடைகள் இன்று முதல் நடைமுநைக்கு வரும் என்று நிதியமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அதன்படி, அமெரிக்க வரிகளைக் குறைப்பது குறித்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று விசேட அறிக்கை வெளியிட உள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. 

ட்ரம்பின் அறிவிப்பு 

நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து எதிர்க்கட்சிகள் கொண்டு வரும் நாடாளுமன்ற ஒத்திவைப்பு விவாதத்தின் போது ஜனாதிபதி இந்த அறிக்கையை வெளியிடுவார் என்று கூறப்படுகின்றது. 

இந்த ஒத்திவைப்பு விவாதம் இன்று நாடாளுமன்றத்தில் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இலங்கை மீது 44 வீதம் பின்னர் 30 வீதம் என பரஸ்பர விதிகளை அறிவித்தார். 

பின்னர், 90 நாட்கள் கால அவகாசம் அளித்து பேச்சுவார்த்தைகளுக்கு இணங்க முடியும் என ட்ரம்ப் குறிப்பிட்டிருந்தார். 

அதற்கமைய அமெரிக்காவுடன் இலங்கை நிதிக்குழு மேற்கொண்ட பேச்சுவாரத்தைகளின் பின்னர் வரி 20 வீதமாக குறைக்கப்பட்டது. 

நல்லூர் கந்தசுவாமி கோவில் 10ஆம் நாள் திருவிழா

NO COMMENTS

Exit mobile version