Home முக்கியச் செய்திகள் யாழில் அதிரடியாக கைது செய்யப்பட்ட இளைஞர்கள்

யாழில் அதிரடியாக கைது செய்யப்பட்ட இளைஞர்கள்

0

யாழ்ப்பாணம் (Jaffna) – வட்டுக்கோட்டை காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் வைத்து
கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டனர்.

வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் காவல்துறை மா அதிபர் திலக் தனபாலவின் கீழ் இயங்கும் காவல்துறை குற்றத்தடுப்பு பிரிவினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

காரைநகர் பகுதியைச் சேர்ந்த 32 மற்றும் 34 வயதுடைய இருவரே கஞ்சாவை எடுத்து
சென்றபோது பொன்னாலை பகுதியில் வைத்து இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கை

இதன்போது 12 கிலோ 730 கிராம் எடையுடைய கஞ்சா மீட்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் வட்டுக்கோட்டை காவல் நிலையத்தில்
கையளிக்கப்பட்டனர்.

விசாரணைகளின் பின்னர் அவர்களை மல்லாகம் நீதிமன்றத்தில்
முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். 

NO COMMENTS

Exit mobile version