Home இலங்கை குற்றம் பளையில் பெருமளவான கஞ்சாவுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது

பளையில் பெருமளவான கஞ்சாவுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது

0

பளை – தம்பகாமம் பகுதியில் பெருமளவான கஞ்சாவுடன் சந்தேகநபர்கள்
இருவர் கைது செய்யப்பட்டனர்.

இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், இக்கைது நடவடிக்கை இன்று (02) முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

நீதிமன்றத்தில் முன்னிலை  

இதன்போது, சொரம்பட்டு பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய சந்தேகநபர் ஒருவரும்,
தம்பகாமம் பகுதியை சேர்ந்த 45 வயதுடைய சந்தேகநபர் ஒருவரும், 23 கிலோ 165
கிராம் கஞ்சாவுடன் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகளுக்காக அவர்கள் இருவரும் சான்றுப்பொருட்களுடன் பளை பொலிஸ்
நிலையத்தில் பாரப்படுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன், மேலதிக விசாரணைகளின் பின்னர் அவர்களை
நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு
வருகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version