Home இலங்கை குற்றம் யாழில் 42 மில்லியன் பெறுமதியுடைய கேரள கஞ்சாவுடன் இருவர் கைது

யாழில் 42 மில்லியன் பெறுமதியுடைய கேரள கஞ்சாவுடன் இருவர் கைது

0

யாழ்ப்பாணம் – அரியாலைப் பகுதியில் இந்தியாவில் இருந்து
கொண்டுவரப்பட்ட சுமார் 42 மில்லியன் ரூபா பெறுமதியுடைய கேரள கஞ்சாவுடன்
இரண்டு சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, மன்னார் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகள் கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

பறிமுதல் செய்யப்பட்ட கேரள கஞ்சா

இதன்போது, யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்த 39 மற்றும் 44 வயதுடைய
இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், சந்தேகநபர்களிடம் இருந்து 156 கிலோவுக்கும் அதிகமான கேரள கஞ்சா பறிமுதல்
செய்யப்பட்டுள்ளது. 

Source: https://tamilwin.com/article/two-arrested-kerala-ganja-worth-42-million-jaffna-1723479471

NO COMMENTS

Exit mobile version