Home இலங்கை சமூகம் யாழ்பாணத்திற்கு அரச பேருந்தில் கசிப்பு கடத்திய இருவர் கைது

யாழ்பாணத்திற்கு அரச பேருந்தில் கசிப்பு கடத்திய இருவர் கைது

0

புதுக்குடியிருப்பு பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த அரச பேருந்தில் கசிப்பு கடத்தப்படுவதாக தர்மபுர காவல்துறையினருக்கு கிடைத்த தகவலுக்கமையே மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கையானது, நேற்றையதினம்(28) மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அந்த சுற்றிவளைப்பில் 45 லிட்டர் கசிப்புடன் சந்தேக நபர் இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

விசாரணை

அதன்போது, கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் சூட்சுமமான முறையில் பயண பொதியில் கசிப்பினை பொதி செய்து எடுத்துச் சென்றமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

அதேவேளை, கைப்பற்றப்பட்ட கசிப்பு விசுவமடு பகுதியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி கொண்டு செல்லவிருந்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், கைது செய்யபட்ட இரண்டு சந்தேக நபர்களும் கிளிநொச்சி நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தருமபுர காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Source: https://ibctamil.com/article/two-arrested-with-kasippu-in-jaffna-1714345288

NO COMMENTS

Exit mobile version