Home முக்கியச் செய்திகள் மட்டு.சீயோன் தேவாலய பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய நபர்கள்

மட்டு.சீயோன் தேவாலய பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய நபர்கள்

0

மட்டக்களப்பு (Batticaloa) – சீயோன் தேவாலயத்தை அண்மித்த பகுதியில் சந்தேகத்துக்கிடமான வகையில் நடமாடிய இருவர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளர்.

குறித்த தகவலை மட்டு.தலைமையக காவல்துறையினர் இன்றையதினம் (23) உறுதிபடுத்தினர்.

இதன்படி, கைது செய்யப்பட்ட இருவரும் குருநாகலைச் சேர்ந்த 35 மற்றும் வயது 25 உடையவர்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சீயோன் தேவாலயத்தில் போதகர்

குருநாகலைச் சேர்ந்த முஸ்லிம் ஒருவருக்கு கண்ணில் ஏற்பட்டுள்ள வெண்படல நோயைக் குணப்படுத்துவதற்காக மட்டக்களப்பு மென்ராசா வீதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள சீயோன் தேவாலயத்தில் போதகருடன் தொடர்பு கொண்டுள்ளார்.

இதனையடுத்து, நோய்க்குள்ளானவரும் அவருக்கு உதவியாக இருந்தவருமான இருவரும் குருநாகலில் இருந்து பிரயாணித்து சம்பவதினமான இன்று காலை மட்டக்களப்பை சென்றடைந்து சீயோன் தேவாலயத்துக்குச் செல்ல எண்ணி அப்பகுதியில் நடமாடிக் கொண்டிருந்தனர்.

காவல்துறை அவசர தொலைபேசி

இவர்கள் சந்தேகத்துக்கு இடமாக நடமாடியதை அவதானித்த பொதுமக்கள் காவல்துறை அவசர தொலைபேசி இலக்கத்துக்கு தெரிவித்ததையடுத்து காவல்துறையினர் அந்த இடத்துக்குச் சென்று இருவரையும் கைது செய்தனர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட இருவருக்கும் பிணை வழங்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு காவ்லதுறையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version