யாழ்ப்பாணத்தில் கடந்த இரு நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக இரண்டு
குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், கனமழையால் இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த 5 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பாதிப்பு
பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஜே/409 கிராம சேவகர் பிரிவில்
ஒரு குடும்பத்தை சேர்ந்த மூன்று பேரும், ஜே/400 கிராம சேவகர் பிரிவில் ஒரு
குடும்பத்தை சேர்ந்த இரண்டு பேரும் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் ஒரு வீடு பகுதியளவிலும், மற்றைய வீடு முழுமையாகவும் சேதமடைந்துள்ளதாக அவர்
மேலும் தெரிவித்தார்.
