Home இலங்கை சமூகம் செம்மணி மனித புதைகுழியில் மேலும் இரண்டு மனித எலும்பு கூட்டு எச்சங்கள்!

செம்மணி மனித புதைகுழியில் மேலும் இரண்டு மனித எலும்பு கூட்டு எச்சங்கள்!

0

செம்மணி சித்துபாத்தி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வாய்வு
பணியின் போது மேலும் இரண்டு மனித ஓட்டுத் தொகுதிகள் அடையாளம்
காணப்பட்டதாக சட்டத்தரணி வி.எஸ்.நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.

செம்மணி மனித புதைகுழியில் இராண்டாம் கட்ட அகழ்வு பணியின் இரண்டாம் நாள்
பணிகள் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை முன்னெடுக்கப்பட்டன.

 

அகழ்வு பணிகள்

இதன்போது, இரண்டு மனித எலும்பு கூட்டு எச்சங்கள் அடையாளம்
காணப்பட்டுள்ளன.

அதேவேளை நேற்று முன்தினம் அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூட்டு தொகுதிகள்
அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

இரண்டாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக, 45 நாட்கள் அனுமதி
கிடைக்கப்பெற்றுள்ள நிலையில் , 15 நாட்கள் தொடர்ச்சியாக அகழ்வு பணிகள்
நடைபெற்று , பின்னர் சிறு கால இடைவெளியின் பின்னரே மீண்டும் பணிகள் ஆரம்பிக்கப்படும் என
தெரிவிக்கப்பட்டுள்ளது. 

NO COMMENTS

Exit mobile version