Home இலங்கை சமூகம் யாழ்ப்பாணத்தில் கடற்றொழிலுக்கு சென்ற இருவர் மாயம் : குடும்பத்தினர் கலக்கம்

யாழ்ப்பாணத்தில் கடற்றொழிலுக்கு சென்ற இருவர் மாயம் : குடும்பத்தினர் கலக்கம்

0

யாழ்ப்பாணம் அனலைதீவில் இருந்து நேற்றையதினம் (ஜூன்10) மாலை 5 மணியளவில் கடற்தொழிலுக்கு சென்ற இருவரைக் காணவில்லை என குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.

அனலைதீவைச் சேரந்த திருச்செல்வம் மைக்கல் பெனாண்டோ,நாகலிங்கம் விஜயகுமார் என்ற இருவரும் இதுவரை கரை திரும்பவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உறவினர்களும் , ஊர்மக்களும் இணைந்து தேடும் பணியில்

இவர்களை உறவினர்களும் , ஊர்மக்களும் இணைந்து தேடும் பணியில் ஈடுபட்டுள்ளபோதும் இதுவரை எந்த தகலும் கிடைக்கவில்லை என தெரியவருகின்றது.

இவர்கள் தொடர்பான தகவல்கள் கிடைக்கப் பெற்றால் தொடர்பு கொள்ளுமாறு குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.
தொடர்புகளுக்கு;
0772024639
0764215429
0772896716

Source: https://ibctamil.com/article/two-people-fishing-in-jaffna-were-missing-1718140623

NO COMMENTS

Exit mobile version