Home இலங்கை குற்றம் யாழ்ப்பாணத்தில் வன்முறையில் ஈடுபட்ட இருவர் கைது

யாழ்ப்பாணத்தில் வன்முறையில் ஈடுபட்ட இருவர் கைது

0

யாழ்ப்பாணம் (Jaffna) அச்சுவேலி பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்து வன்முறையில்
ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

குறித்த சம்பவம் நேற்று (27.04.2024) இரவு அச்சுவேலி பத்தமேனி பகுதியில் உள்ள வீட்டிலேயே இடம்பெற்றுள்ளது.

இதன்போது வீட்டின் கண்ணாடிகள் மற்றும் ஹயஸ் வான் என்பன சேதமாக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. 

மேலதிக விசாரணை

வன்முறையில் காயமடைந்த 70 வயதான முதியவர் சிகிச்சைக்காக அச்சுவேலி பிரதேச
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தொழில் போட்டியே வன்முறைக்கு காரணம் என சந்தேகிக்கும் அச்சுவேலி
பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Source: https://tamilwin.com/article/two-peopoles-arrested-jaffna-1714271777

NO COMMENTS

Exit mobile version