Home இலங்கை குற்றம் 15 இலட்சம் ரூபாய் பெறுமதியான 24 தேக்க மரக்குற்றிகளை கடத்தி சென்ற இருவர் கைது!

15 இலட்சம் ரூபாய் பெறுமதியான 24 தேக்க மரக்குற்றிகளை கடத்தி சென்ற இருவர் கைது!

0

யாழ்.தென்மராட்சி கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆசைப்பிள்ளை ஏற்றம்
பகுதியில் சட்டவிரோதமான முறையில் கடத்திச் செல்லப்பட்ட
மரக்குற்றிகளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த கைது நடவடிக்கை கொடிகாமம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய இன்று (08.08.2024) காலை 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

பொலிஸ் விசாரணை

குறித்த டிப்பர் வாகனத்தினுள் மரக்குற்றிகள் அடுக்கப்பட்டு அதற்கு மேல் சிறிய
கற்கல் ஏற்றப்பட்டு சூட்சுமமான முறையில் கடத்தி செல்ல முற்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதன்போது, சுமார் 15 இலட்சம் ரூபாய் பெறுமதியான 24 தேக்க மரக்குற்றிகளே இவ்வாறு கடத்திச்
செல்லப்பட்டுள்ளது.

இந்நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய சாரதி உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களை நாளை
சாவகச்சேரி நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த உள்ளதாகவும் பொலிஸார்
தெரிவித்துள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version