Home இலங்கை சமூகம் வவுனியாவில் புனர்நிர்மானம் செய்யப்படவுள்ள இரண்டு வீதிகள்

வவுனியாவில் புனர்நிர்மானம் செய்யப்படவுள்ள இரண்டு வீதிகள்

0

வவுனியா வடக்கு நெடுங்கேணி பிரதேசத்தில் உள்ள இரண்டு வீதிகளை காபட் வீதிகளாக
புனர்நிர்மானம் செய்யும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த புனர்நிர்மானப் பணி இன்று (07.11.2025) வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் ஜெகதீஸ்வரனால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

வவுனியா வடக்கு தேசிய மக்கள் சக்தியின் நெடுங்கேணி பிரதேச சபை உறுப்பினர் அகிலனின்    வேண்டுகோளுக்கிணங்க நெடுங்கேணியில் இருந்து
சேனைபிளவுக்கு செல்லும் ஒரு கிலோமீற்றர் பிரதான வீதி 35 மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்படவுள்ளது.

சாண்டார் குளம் வீதி

இதேவேளை, 35 மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்படவுள்ள நெடுங்கேணி சாண்டார் குளம் வீதிக்கான பணிகளும் நாடாளுமன்ற உறுப்பினரால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version